தொடர்புடைய செய்திகள்
- பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நள்ளிரவில் கைது.. 5 பிரிவுகளில் வழக்கு..!
- அதிமுகவை சீண்ட வேண்டாம்: நாங்கள் யாருக்கும் அடிமையல்ல- எடப்பாடி பழனிசாமி
- சங்பரிவார்களின் சமூகப் பிரிவினைவாத சதி அரசியலை முறியடிப்போம்! திருமாவளவன்
- தமிழர்கள் என்றும் ஒன்றுபட்ட தேசத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் : அண்ணாமலை
- ஒரு முதல்வருக்கு இது அழகா? சிபிஐ குறித்த தமிழக அரசின் முடிவு குறித்து அண்ணாமலை..!
விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ள தெரியாத திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்..!
பாஜகவின் மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா நேற்று நள்ளிரவில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
தமிழக பாஜக மாநிலச் செயலாளர் திரு எஸ்ஜி சூர்யா அவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.
விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.
கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை அறிவாலயம் அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு.
பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்.
Edited by Mahendran
