தொடர்புடைய செய்திகள்
- பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் - அரசு அறிவிப்பு
- ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் மறியல்: ஈரோட்டில் பதற்றம்
- இன்றுடன் கெடு முடிகிறது! பணிக்கு வருபவர்களை தடுத்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
- போராட்டம் நடத்துவதற்கு மட்டுமே கட்சி நடத்தும் வைகோ: பொன் ராதாகிருஷ்ணன்
- நாளை பணிக்கு வந்தால் நடவடிக்கை இல்லை! இல்லையேல்? பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
சம்பளம் அதிகமா கேக்குதோ? ஆசிரியர்களை வெளுத்து வாங்கும் ராணுவவீரர்
போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை ராணுவ வீரர் ஒருவர் கடுமையாக விமர்சித்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதால் அரசுப்பணிகளும், பள்ளிப்பணிகளும் பெரும் பாதிப்பில் உள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. ஆசிரியர்களின் இந்த போராட்டத்தால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் ராணுவ வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் உங்களுக்கு சம்பளம் அதிகமா கேக்குதோ? நீங்க அப்படி என்ன வேல பாக்குறீங்க உங்களுக்கு சம்பளம் அதிகமா கொடுக்குறதுக்கு. சம்பளம் அதிகமா வேணும் தான் தனியார் ஸ்கூல வேல பாருங்க. இதுல எத்தன பேரு அவுங்க பசங்கல அரசு பள்ளில படிக்க வச்சுட்டு இருக்கீங்க?
நாங்க உங்களுக்கு ஆதரவு கொடுக்கனுமா? நீட் தேர்வுக்கு நாங்க எதிர்ப்பு தெரிவிச்சபோது நீங்கல்லாம் எங்க போனீங்க? இப்போ உங்களுக்கு ஒன்னுன்னா கொதிக்கிறீங்க. இவங்களையெல்லாம் அரசாங்கம் விடகூடாது. எல்லாத்தையும் உடனடியாக வேலையிலிருந்து தூக்கனும் என ஆவேசமாக பேசினார்.
