1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK to decide on alliance for by election

அதிமுக யாருடன் கூட்டணி? இன்னும் 2 நாட்களில் வரும் பதில்!

அதிமுக
இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்தும் அடுத்த இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என தகவல்.

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை முடிவு செய்ய அதிமுக ஆட்சி மன்ற குழு விரைவில் கூடி முடிவேடுக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் என்றும் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று முன்னர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக தென்னரசு, ராமலிங்கம் மற்றும் நந்தகுமார் ஆகிய மூவரில் ஒருவரை தான் களம் இறக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்தும் அடுத்த இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
நடிகர் நந்தமுரி தாரக ரத்னாவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடம்!