தொடர்புடைய செய்திகள்
- மெல்ல விலை குறையும் தங்கம்!- இன்றைய விலை நிலவரம் என்ன?
- பாஜகவினால் திறக்கல.. மக்களுக்காகதான்..! – கோவில் திறப்பு குறித்து அமைச்சர் சேகர்பாபு!
- காந்திக்கு அடுத்து தேசத்தந்தைன்னா அது கலாம்தான்! – கமல்ஹாசன் ட்வீட்!
- கடலூரில் மாணவரை மூர்க்கமாக தாக்கிய ஆசிரியர்! – கைது செய்த போலீஸ்!
- மயக்க ஊசி போட்டும் மண்ணை தூவிய டி23 புலி! – தீவிர தேடுதலில் வனத்துறை!
அதிமுக தலைமை அலுவலகம் பெயர் மாற்றம்! – ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு!
அதிமுக கட்சி தனது பொன்விழாவை கொண்டாட உள்ள நிலையில் தலைமை அலுவலகத்தின் பெயர் மாற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு முக்கியமான அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளது அஇஅதிமுக. அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெறும் பொன்விழாவை கொண்டாட அதிமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவின் பொன்விழாவை பிரம்மாண்டமான மாநாடு நடத்தி கொண்டாட கட்சி தலைமை திட்டமிட்டு வருகிறது. மேலும் பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளதாக ஈபிஎஸ்- ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
