1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (15:37 IST)

வெற்றிபெற்ற அதிமுக கவுன்சிலர் திமுகவுக்கு தாவல்! – அதிர்ச்சியில் அதிமுக!

ஆவடியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆவடி மாநகராட்சி 14வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜேஷ்குமார். இன்று காலை அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் திமுக அமைச்சர் நாசர் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் நின்று வென்ற கவுன்சிலர் திமுகவிற்கு தாவிய சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.