1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (17:34 IST)

கரூரில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தொண்டர்கள்

admk
கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி 32வது வார்டு பகுதியின் திமுக வை சேர்ந்த சங்கீதா மற்றும்  வெண்ணிலா ஆகியோர் திமுக வின் செயல்பாடுகள் பிடிக்காததால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துகொண்டனர்.


கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி 32வது வார்டு பகுதியின் திமுக வை சேர்ந்த சங்கீதா மற்றும்  வெண்ணிலா ஆகியோர் திமுக வின் செயல்பாடுகள் பிடிக்காததால் திமுகவில் இருந்து விலகி  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள்  முதலமைச்சரும், கழக பொதுச் செயலாளருமான திரு.எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று  முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மற்றும்  கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு.மா.சின்னசாமி அவர்களின் முன்னிலையில் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். 
 
உடன் மாவட்ட துணை செயலாளர் மல்லிகா சுப்ராயன் கரூர் சட்டமன்ற தொகுதி பொதுகுழு உறுப்பினர் பசுவை சிவசாமி கரூர் மத்திய மாநகர தெற்கு பகுதி கழகச் செயலாளர் சேரன்.எம்.பழனிசாமி மற்றும் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.