1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (16:27 IST)

ஆண் பூனை ஒன்று பூனைக்குட்டி ஈன்ற சம்பவம் வைரல்...மக்கள் ஆச்சர்யம்

cat
திரிபுராவில்  ஆண் பூனை ஒன்று பூனைக்குட்டியை  ஈன்றதாக வெளியாகும் தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் உள்ள கோமதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஸ்வாஸ். இவர்  கடந்த 3 ஆண்டுகளாக சம்பல்- வெள்ளை நிறம் கொண்ட மோகி என்ற ஆண்  பூனையை வளர்த்து வருகிறார்.

இந்த பூனை சில நாட்களுக்கு முன்பு பெண்பூனைக்குட்டியை ஈன்றது.

ஒரு ஆண் பூனைக்குட்டி, பூனைக்குட்டியை ஈன்ற சம்பவம் பெரும்  ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பூனையைப் பார்க்க அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தினமும் வருகை புரிந்த் வண்ணம் உள்ளனர்.

இந்த தகவல் பற்றி தெரிந்ததும் கால் நடை மருத்துவர்கள் அணில் வீட்டிற்குச் சென்றனர்.
 ஆண் பூனை எப்படி பூனையை பிரசவித்தது என்று அதிர்ச்சியடைந்து, இதற்கு அவர்களால் விளக்கம் அளிக்க முடியவில்லை.