1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (14:48 IST)

விபத்து நஷ்ட ஈடு விவகாரம்: அரசுப் பேருந்து நடுவழியில் ஜப்தி!

தமிழகத்தில் ஓடத் தொடங்கிய பேருந்துகள்
விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசு விரைந்து பேருந்தை   நடுவழியில் நிறுத்தி வேப்பூரில் வைத்து நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

கடலூர்  மாவட்டம் ஊ.கொளப்பாக்கம் என்ற பகுதியைச் சேர்ந்தவர்  பச்சசமுத்து. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மாட்டு வண்டியில் செல்லும்போது,  அரசு விரைவுப்பேருந்து மோதியது. இதில், அவரது 2 மாடுகள் உயிரிழந்தன.

இதுதொடர்பாக வழக்கில், அவருக்கு  நஷ்ட ஈடாக 6  லட்சத்து 47 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விருத்தாசலம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இழப்பீட்டுத்தொகை  பச்சமுத்திற்கு வழங்கப்படவில்லை.

எனவே, இன்று திருச்சியில் இருந்து சென்னைக்குப் பயணிகளுடன் சென்ற அரசு விரைந்து பேருந்தை   நடுவழியில் நிறுத்தி வேப்பூரில் வைத்து நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Edited by Sinoj