தொடர்புடைய செய்திகள்
- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ..!
- ’தி கேரளா ஸ்டோரி’ படத்தால் விபரீதம் எங்களை குற்றம் சொல்ல கூடாது.. மம்தா பானர்ஜி..!
- ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு
- ''என்னை கைது செய்வதற்கு முன்னான என் கடைசி டுவீட்'' -இம்ரான் கான்
- செந்தில் பாலாஜி வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!
பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 3வது வழக்கு..!
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச் சின்னம் வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இந்த நினைவுச் சின்னத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் பின் பக்கமாக கடல் மேல் பேனா நினைவுச் சின்னத்தை கட்டி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்திற்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக ஏற்கனவே மீனவர் சங்கம் சார்பிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பிலும் தனிதனி மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து உள்ளார். கடல் வளத்தை பாதுகாக்கவும் கடல் அரிப்பை தடுக்கும் வகையிலும் இந்த நினைவு சின்னத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
