1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:42 IST)

கொரோனாவே முடியல.. அதுக்குள்ள இன்னொரு நோயா? – அகமதாபாத்தில் மர்ம நோய்!

இந்தியாவில் கொரோனாவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அகமதாபாத்தில் புதிய நோய் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பல மாதங்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது தடுப்பூசி செலுத்தும் நிலை வரை வந்துள்ளது. ஒருவழியாக கொரோனாவிலிருந்து தப்பி விடலாம் என மக்கள் ஆசுவாசம் அடைந்த நிலையில் புதிய நோய் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் திடீரென பரவி வரும் புதிய மர்ம நோயால் இதுவரை 44 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நோய்க்கான காரணம் என்ன என மருத்துவர்கள் ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.