தொடர்புடைய செய்திகள்
- அசிங்கப்படுத்திடாதீங்கடா டேய்... வீரம் படத்தை தொடர்ந்து இந்தியில் ரிமேக் ஆகும் பரியேறும் பெருமாள்!
- சூர்யாவை மிரட்டவரும் கே.ஜி.எஃப் வில்லன் - எதிர்பார்ப்பை எகிறடிக்கும் "கங்குவா"
- தோனிக்காக மஞ்சள்மயமான ஈடன் கார்டன்: ரஹானே 2.0 ரகசியம் என்ன?
- மத்திஷா பதிரண: தோனியின் புதிய வார்ப்பான 'பேபி மலிங்கா' 175 கி.மீ. வேகத்தில் பந்துவீசக் கூடியவரா?
- லியோ படத்திற்காக திரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மாணவனின் காதுக்குள் தேனீ புகுந்ததால் பரபரப்பு
வேலூர் மாவட்டம் தட்டப்பாறை என்ற கிராமத்தில் தேன் எடுக்கச் சென்ற மாணவனின் காதில் தேனீ புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூங்கும்போது காதுக்குள் எறும்புகள், பூச்சிகள், வண்டுகள், புகுவதைப் பார்த்திருப்போம். கடந்தாண்டு செப்டம்பரில் பெண் ஒருவரின் காதில் பாம்பு நுழைந்துவிட்டதாக ஒரு வீடியோ வெளியாகி பரவலானது.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை என்ற கிராமத்தில் தேன் எடுக்கச் சென்ற மாணவனின் காதில் தேனீ புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை என்ற கிராமத்தில் தேன் எடுக்கச் சென்ற 10 ஆம் வகுப்பு மாணவனின் காதுக்குள் தேனீ புகுந்துவிட்டது. இதனால் வலியால் துடித்த மாணவரைன் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் மாணவனின் காதில் இருந்த தேனீயை உயிருடன் வெளியே எடுத்தனர். மேலும், 2 சிறுவர்கள் தேனீ கொட்டியதற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
