1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 7 ponds missing- Complaint to District Collector

7 குளங்களைக் காணவில்லை- மாவட்ட ஆட்சியரிடம் புகார்

ponneri
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், 7 குளங்களைக் காணவில்லை என்று சினிமா பாணியில் புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் புதூர் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் தனியார் நிலம் ஆக்கிரம்பிக்கு செய்ததாகவும் இதனால், அங்கிருந்த  7 குளங்களைக் காணவில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சிவக்குமார் என்ற இளைஞர் புதூர் கிராமத்தில் இருந்த 7 குளங்களை 2018 முதல் காணவில்லை என்று வட்டாச்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல அதிகாரிகளிடம் புகாரளித்துள்ள நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்பபடுகிறது.

இந்த நிலையில், இன்று, 7குளங்களைக் காணவில்லை என்று எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பெயர் பலகையுடன் அவர், கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

இக்குளங்ககைக் காணாததியால், தன்  வாழ்வாதாரம் மற்றும் கால்நடைகளின் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும்: பாமக எம்எல்ஏ ஆவேசம்..!