1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (09:05 IST)

தாயை பழிவாங்க 5 வயது சிறுவனை துடிதுடிக்க வெட்டிக்கொன்ற கொடூரன்!

தாயை பழிவாங்க 5 வயது சிறுவனை துடிதுடிக்க வெட்டிக்கொன்ற கொடூரன்!

நெல்லை மாவட்டம் பேட்டையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் கண் முன்னே துடிக்க துடிக்க வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பேட்டை, சுந்தரவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த இசக்கியப்பன், பிரேமா தம்பதியனருக்கு கல்பனா, தருண்மாடசாமி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இசக்கியப்பன் வெளிநாட்டில் பணியாற்றி வருகின்றார்.
 
இந்நிலையில் பிரேமா அவரது உறவினர் ஆறுமுகம் என்பவருக்கு கலா என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த கலா கணவர் ஆறுமுகத்தின் நடத்தையில் சந்தேகப்பட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
 
இந்நிலையில் பிரேமா தான் இதற்கு காரணம் என நினைத்த ஆறுமுகம் அவரை பழிவாங்கி எண்ணி, நேற்று மாலை பிரேமா அவரது 5 வயது மகன் தருண் உடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது வழி மறித்து அந்த சிறுவனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான். இதனை தடுக்க முயன்ற தாய் பிரேமாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
 
பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடிய ஆறுமுகத்தை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவன் தருணையும், தாய் பிரேமாவையும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
ஆனால் சிறுவன் தருண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். பிரேமா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.