தொடர்புடைய செய்திகள்
- மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!
- மசாஜ் சென்டர்களில் வேலை பார்த்தார்களா நடிகைகள், கல்லூரி மாணவிகள்? அதிர்ச்சி தகவல்..!
- பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. வழக்கம் போல் தேர்ச்சி விகிதத்தில் சாதனை செய்த மாணவிகள்..!
- நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு.. மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?
- அமெரிக்காவில் ஆந்திரா மாணவிகள் இருவர் கைது.. சூப்பர் மார்க்கெட்டில் திருடினார்களா?
உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு
உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் 2016-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு காரணமாக பொறியியல், கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளிடம் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது.
Edited by Mahendran
