1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 5 percent reservation for physically handicapped students

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

assembly
உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் 2016-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு காரணமாக பொறியியல், கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளிடம் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது.

Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?