வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 ஜூன் 2021 (19:48 IST)

3 வது கொரோனா அலை...மருத்துவர் எச்சரிக்கை !

இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவும் இன்னும் 6 முதல் 8 வாரத்தில் 3 வது கொரோனா அலை தாக்கும் என எய்ம்ஸ் மருத்துவர் ரன்தீப்  குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ஊரடங்கு முறைகள் தளர்த்திய பிறகு  கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றுவது மக்களிடம் குறைந்துள்ளது.  வேகமாகப் பரவிவரும் கொரொனா 2 வது அலையில் இருந்து நாம் என்ன கற்றுக்கொணொம்? கொரொனாவைக் குறைப்பது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில்தான் உள்ளது.  இருப்பினும் 3 வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அனைத்து முன்னேற்பாடுகளுடன் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.