1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 2nd installment from tomorrow in Tamil Nadu

ரேசனில் நாளை முதல் 2 வது தவணைத் தொகை....!

ரேசன்
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில்,  முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி கொரொனா 2 வது  நிவாரணத் தவணைத் தொகைக்கான டோக்கம் நாளை முதல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், தமிழகத்தில் நாளை முதல் வரும் 14 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கம் வழங்கப்படும் என உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

கொரொனா கால ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
கள்ளச்சாராய சோதனை: பணம், நகைகளை எடுத்ததாக போலீஸ் மீதே விசாரணை