தொடர்புடைய செய்திகள்
- 10 நாட்களாக வட்டமாக சுற்றி வரும் ஆடுகள்! – வைரலான வீடியோவால் பீதி!
- ’வரட்டா மாமே.. டுர்ர்..!’ மழை கோட்டு போட்ட ஆடுகள்! – யார் பாத்த வேல இது?
- ஆட்டுகெல்லாம் வேலை கிடைக்குது கூகுள்ல…!!
- உட்கட்சி நிர்வாகி மீது புகார்....முதல்வர் ஸ்டாலின் எப்போது சாட்டையை சுழற்றப்போகிறார்?
- அணில்கடித்து மின்கம்பிகள் துண்டாகினவா ? அணில் கடித்து ஆடுகள் இறந்தனவா ? விவசாயிகள் சோகம்
வெறிநாய் கடித்து 20 ஆடுகள் பலி...
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாகைக்குளம் என்ற கிராமம் உள்ளது.
இங்கு வசிக்கும் பால்பான்டி, இருளாண்டி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கால் நடை விவசாயிகளாக உள்ள நிலையி, ஆடுகளை வைத்துக் கிடை போட்டு இருந்தனர்.
இவர்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாலையில் இடையில் அடைத்து வைப்பர். நேற்று வழக்கம் போல ஆடுகளை இடையில் அடைத்து வைத்தனர்.
பின்னர் வந்து பார்த்தபோது, அதில் 20 செம்மறி ஆட்டுக்குட்டிகள் காயங்களுடன் இறந்து கிடந்தன.
வெறிநாய்கள் கடித்து இறந்துள்ளதாக அவர்களுக்கு தகவல் தெரிந்ததும், இதுகுறித்து, பால்பாண்டி மற்றும் இருளாண்டி இருவரும் பேரூராட்சிக்கும் காவல் நிலையத்திலும் புகாரளித்தனர்.
இறந்த ஆட்டுக்குட்டிகளின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும், இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
