1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 நவம்பர் 2021 (13:59 IST)

டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் இன்றும் சில பகுதிகளில் கனமழைப் பெய்து வருவதால் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்கள் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பருவமழை இரண்டு மடங்கு அதிகமாக பெய்யலாம் என கூறப்படுகிறது. இன்று கனமழை காரணமாக 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தீபாவளி நாளான இன்றும் மழைப் பெய்து வருவதால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.