1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (17:15 IST)

தீம் பார்க்கில் தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் தீம் பார்க்கில் தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மல்லூரியில் ஒரு தனியார் தீம் பார்க் செயல்பட்டு வருகிறது. தற்போது, பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை என்பதால் மாணவர்கள், சிறுவர்கள் எனப் பலறும் தங்கள் குடும்பத்துடன் இந்த தீம் பார்க்கிற்கு வந்து விளையாடி மகிழ்கின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் எருமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயதான செளடேஸ்வரன் கோடை விடுமுறைக்காக தன் குடும்பத்தினருடன் இந்த தீம் பார்க் சென்றுள்ளார்.

அப்போது, நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தபோது, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.