வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

தேங்காய்ப்பால் இறால் குழம்பு செய்ய வேண்டுமா...!

தேவையான பொருட்கள்:
 
இறால் - அரை கிலோ
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
புளிச்சாறு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
துருவிய தேங்காய் - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 5
வெங்காயம் - 1
கறிவேப்பிலை சிறிது
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
பெருஞ்சீரகம், கடுகு, பட்டை, கறிவேப்பிலை.

 
செய்முறை:
 
* இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆற வைக்கவும். வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் அதை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக  அரைத்து கொள்ளவும்.
 
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கடுகு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து  வதக்கவும்.
 
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த மசாலா, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து அதில் புளிக்கரைசல்,  உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 
 
* குழம்பு பதம் வந்தவுடன் அதில் சுத்தம் செய்த இறால்களை சேர்த்து 10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான தேங்காய்ப்பால் இறால் குழம்பு தயார்.