வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

ஆம்லெட் குழம்பு செய்ய...

தேவையான பொருட்கள்:
 
முட்டை - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
மல்லித்தூள் - அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
முந்திரி - 10 
கடுகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

 
செய்முறை :
 
* வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை சுடுதண்ணீரில் போட்டு தோலை  உரித்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். முந்திரி, தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து  கொள்ளவும்.
 
* ஒரு பாத்திரத்தில் முட்டை, மிளகு தூள், சிறிது மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது  போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். நன்றாக அடித்த முட்டை கலவையை ஓவன் அல்லது குழி பணியார கல்லில் ஊற்றி  வேகவைத்து சிறு இச்று ஆம்லெட்டாக எடுத்து கொள்ளவும். வேற வழி என்றால் தோசை கல்லில் ஊற்றி அதை சதுரமாக  வெட்டிக் கொள்ளவும்.
 
குழம்பு செய்ய:
 
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக  வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்னர் தக்காளி விழுதை போட்டு நன்றாக கிளறவும். பிறகு தேங்காய் விழுது, 2 கப்  தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். 
 
* கிரேவி நன்றாக கொதித்து கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெட்டி வைத்துள்ள முட்டை  துண்டுகளை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான ஆம்லெட் குழம்பு தயார்.