வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு நிவாரணம் தரும் வெந்தயக் கீரை...!!

வெந்தயக் கீரையின் இலைகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இதனால், ரத்தத்தில் சர்க்கரை சேரும் அளவு குறைகிறது. கீரையில் உள்ள அமினோ அமிலம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் எப்போதும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
உடல் சோர்வாக உள்ளவர்கள் வெந்தயக்கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்  கண் பார்வை அதிகரிக்கும்.
 
நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும். இது நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர சீரிய முறையில் உதவும்.
 
வயிற்று வலி உப்புசமாக உணர்தல் வயிற்று எரிச்சல் போன்ற வயிறு சார்ந்த கோளாறுகள் குணமாக வெந்தயக் கீரை உதவும்..
உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைந்து குளிர்ச்சியாக உணர  உதவும்.
 
வெந்தயக் கீரையை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதால் மார்புவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுக் காணலாம்  என்று கூறப்படுகிறது.