தொடர்புடைய செய்திகள்
- மனைவியுடன் சண்டை! மாமியார் வீட்டுக்கு போக பேருந்தை கடத்திய டிரைவர்! - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!
- ஆந்திராவை எழுப்புவதற்கான பட்ஜெட்.. நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொன்ன சந்திரபாபு நாயுடு..!
- பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு.! பீகார் - ஆந்திராவுக்கு வாரி வழங்கிய மத்திய அரசு..!!
- மத்திய பட்ஜெட்டா? ஆந்திரா, பீகார் நலன் பட்ஜெட்டா? பொருளாதார நிபுணர்கள் கேள்வி..!
- கன்னடர் பணி ஒதுக்கீடு மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! ஐடி நிறுவனங்களுக்கு ஆந்திரா அழைப்பு..!!
ரோடு ரோலரை ஏற்றி நொறுக்கப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள்.. ஆறாக ஓடிய மது..!
ஆந்திர மாநிலத்தில் ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை ரோடு ரோலரை வைத்து நொறுக்கப்பட்ட நிலையில் மது ஆறாக ஓடியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஆந்திர மாநிலத்தில் சட்டவிரோதமாக வெளி மாநிலங்களிலிருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டது.
பல்வேறு வகை வகையில் 27,568 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதன் மதிப்பு ரூ.36 லட்சம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கலால் சட்டத்தின்படி பறிமுதல் செட் செய்யப்பட்ட மது பாட்டில்களை ரோடு ரோலரை விட்டு காவல்துறையினர் நொறுக்கினர். அப்போது பாட்டில்கள் உடைந்து சிதறி மது ஆறாக ஓடிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து திருப்பதி எஸ்பி சுப்பராய்டு அவர்கள் கூறிய போது மது பாட்டில்களை கடத்தி வருவது சட்டப்படி குற்றம் என்றும் குறிப்பாக இளைஞர்கள் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை அழித்துக் கொள்ள வேண்டாம் என்றும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
