ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

இரண்டு நாடுகளுக்கும் தடுப்பூசி ஏற்றுமதி: மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதும் ஏராளமான மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவில் சுமார் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் தினமும் சுமார் 20 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்தியாவின் தேவைக்குப் போக மீதமுள்ள தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய சமீபத்தில் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி முதல்கட்டமாக நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து விரைவில் இந்த இரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது