1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 1 மே 2023 (07:26 IST)

கர்நாடக தேர்தல் பிரச்சாரம்.. பிரதமர் மோடி மீது செல்போனை எறிந்த மர்ம நபர்..!

கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அவர் மீது மர்மமனிதர் ஒருவர் செல்போனை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக பிரமுகர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவரை நோக்கி செல்போன் என்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் விசாரணை செய்து செல்போனை இருந்த நபர் யார் என்று சிசிடிவி மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். 
 
இதுவரை செல்போனை எறிந்த நபர் பிடிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து பிரதமருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொடுக்க கர்நாடக மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva