தொடர்புடைய செய்திகள்
- திடீர் திருப்பம்: நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி தோல்வி என அறிவிப்பு
- 24 மணி நேர தடையை கண்டித்து தர்ணா போராட்டம்: மம்தாவில் மேற்குவங்கத்தில் பரபரப்பு
- மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்த தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு
- மேற்குவங்கத்தில் இன்று 2ஆம் கட்ட தேர்தல்: மம்தா போட்டியிடும் தொகுதியிலும் தேர்தல்!
- பாஜகவை விரட்ட எனது ஒரு கால் போதும்! பிரச்சாரத்தில் மம்தா !
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா: என்ன காரணம் தெரியுமா?
சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில் அம்மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது
இந்த நிலையில் மம்தா பானர்ஜி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற போதிலும் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து அவர் முதல்வராக பதவியேற்ற போதிலும் 6 மாதத்திற்குள் எம்எல்ஏவாக வேண்டும்
இதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிபூர் என்ற தொகுதியை போட்டியிட்ட மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த சொவந்திப் சேட்டர்ஜி என்பவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் தான் மம்தா பானர்ஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
