1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2019 (18:43 IST)

மலை உச்சியில்.. மரத்தின் விளிம்பில் வேலை செய்யும் ’சிங்கப்பெண் ’... வைரல் போட்டோ

நாம் இந்த உலகில் வாழ்வதற்கு எதாவது தொழில் செய்து பிழைக்க வேண்டு. அப்போதுதான் நாம் செய்கின்ற வேலைக்குக் கிடைக்கும் கூலியை வைத்து அன்றாடமும் வாழ்க்கை நடத்தி உயிர்வாழமுடியும். குடும்பத்தை நடத்த முடியும்.ஆனால், ஏழைகளில் நிலைமை சில வேளைகளில் அபாகரமான வேலைகளில் ஈடுபட வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், , சித்தார்த் பகாரிய என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  ’எங்கள் ஹிமாச்சலி  தைரிய பெண்’ என்று பதிவிட்டு ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு பெண் மலை உச்சியில், வளர்ந்துள்ள, மரத்தின் உச்சிக் கிளையில்  அமர்ந்து வேலை செய்வது போன்று அந்த போட்டோ உள்ளது.
 
பார்ப்பதற்கே பயப்பட தோன்று விதத்தில் இருந்தாலும், அந்தப் பெண் துணிந்து வேலை செய்வதை அனைவருக் பாராட்டி வருகின்றனர். அதேசமயம், இது அபாகரமான வேலை இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என நெட்டிசன்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.