தொடர்புடைய செய்திகள்
- இந்தியா-தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை வெல்லுமா?
- 2.90 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி!
- மேற்கு வங்கத்தில் கொரோனா; பள்ளி, கல்லூரிகள் மூடல்! – கடும் கட்டுப்பாடுகள்!
- சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு அறை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஒரே நாளில் 33 ஆயிரம் பேருக்கு கொரோனா – அதிர்ச்சியளிக்கும் இந்திய நிலவரம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களில் வேகமாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. சமீபகாலமாக 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,48,95,329 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,81,893 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,42,95,407 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,45,582 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
