1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (11:33 IST)

மதியம் 2 மணியில் இருந்தே இரவு ஊரடங்கு… அறிவித்த மாநகராட்சி!

திருப்பதி மாநகராட்சியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மதியம் 2 மணியில் இருந்தே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி மாநகராட்சி அதிகமாக உள்ள தொற்று எண்ணிக்கையை குறைக்கும் விதமாக மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக எம் எல் ஏ கருணாகர ரெட்டி தெரிவித்துள்ளார்.