தொடர்புடைய செய்திகள்
- முதலமைச்சர் குறித்து தவறாக நான் எதுவும் சொன்னதில்லை: நட்ராஜ் விளக்கம்..
- அமீர்-ஞானவேல் ராஜா பிரச்சனை.. தொடர் மெளனம் காக்கும் சூர்யா-கார்த்தி..!
- கமகமக்கும் கொண்டைக் கடலை குழம்பு செய்வது எப்படி?
- மத்திய அரசில் 26,146 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10th தேர்ச்சி போதும்! – உடனே அப்ளை பண்ணுங்க!
- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு EEG சோதனை.. மருத்துவர்கள் கூறிய முக்கிய தகவல்..!
தெலுங்கானாவில் ஆட்சியை இழக்கிறதா பி.ஆர்.எஸ்? ஆட்சியை பிடிப்பது யார்?
தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த சந்திரசேகர ராவ் அவர்களின் பிஆர்எஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் ஏறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென அம்மாநிலத்தில் முடிவுகள் மாற இருப்பதாக கூறப்படுகிறது
தெலுங்கானா சட்டசபை வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றின் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 57 முதல் 62 இடங்கள் வரை பிடிக்கும் என்றும் பிஆர்எஸ் 41 முதல் 46 இடங்களை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. பாஜக 3 முதல் 6 இடங்கள் மட்டுமே பிடிக்கும் என்றும் இதர கட்சிகள் ஒன்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் என்று கூறியுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின்படி தெலுங்கானா மாநிலத்தில் முதல்முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் டிசம்பர் மூன்றாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது தான் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாக தெரியவரும்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
