தொடர்புடைய செய்திகள்
- நாளை விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட்..! பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.!!
- எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஏவும் தேதி.. தள்ளி வைத்தது இஸ்ரோ.. என்ன காரணம்?
- இஸ்புல்லா தளபதி கொலை! இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் ஏவி தாக்குதல்! - பரபரப்பான போர் சூழலில் மத்திய தரைக்கடல்!
- ஃபேன்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும் "ராக்கெட் டிரைவர்"
- இஸ்ரேலுக்குள் ராக்கெட்டை விட்டு தாக்கிய ஹிஜ்புல்லா..! – பதிலடியில் இறங்கிய இஸ்ரேல்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட் .. இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்..!
SSLV-D3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ வடிவமைத்துள்ள இஎஸ்ஓ 08 என்ற செயற்கைக்கோள் பூமி கண்காணிப்புக்காக செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை சுமந்தபடி SSLV-D3 என்ற ராக்கெட் சற்று முன்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.
பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்று பாதையில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்தது என்றும் இந்த ராக்கெட்டில் 165 கிலோ கொண்ட மூன்று ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு கருவியும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காக செயல்பட உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இஸ்ரோ வெற்றிகரமாக SSLV-D3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Edited by Siva
