1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. share market sensex down today also

இரண்டாவது நாளாகவும் சரிந்த பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் கலக்கம்!

பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மீண்டும் பங்குச் சந்தை சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக அதிக அளவில் சரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
நேற்று சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் பங்குச்சந்தையில் முதலீடு செய்த கோடிக்கணக்கானோர் நஷ்டம் அடைந்தனர் 
 
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் 100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்தது என்பதும் தற்போது சுமார் 20 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நிப்டி சற்றே உயர்ந்து காணப்படுகிறது என்பது ஆறுதல் கூறிய விஷயமாகும்.
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் மோசடியா?