வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (20:46 IST)

வதந்திகளை பரப்பும் 8 டுவிட்டர் கணக்குகளை நீக்க பரிந்துரை ! உள்துறை அமைச்சகம் அதிரடி

காஷ்மீரில் வதந்திகளை பரப்பும்  8 டுவிட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் டுவிட்டர் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
சமீபத்தில் இந்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370 ஐ நிக்கியது. இதனால் காஷ்மீரில் பலத்த பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.இண்டெர்னெட், செல்போன்  உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் காஷ்மீரை சேர்ந்த 8 கணக்குகளை தடை விதிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடித்தத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.