1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Railway minister to implement new rules

விஐபி கலாச்சாரத்திற்கு மூடுவிழா: ரயில்வே அமைச்சர் அதிரடி அறிவிப்பு...

விஐபி கலாச்சாரம்
ரயில்வே துறையில் நிலவும் விஐபி கலாச்சாரத்திற்கு மூடுவிழா கொண்டாடும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர்.


 
 
சமீப காலமாக ரயில் விபத்து, ரயில் உணவு ஆகியவை குறித்து ரயில்வே துறை மீது தொடர்ச்சியான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
 
இதனால் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அதில் ஒன்று, விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது.
 
மேலும், ரயில்வே உயர் அதிகாரிகள், கடைநிலை பணியாளர்களை தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பூங்கொத்து உள்ளிட்ட எந்த பரிசு பொருட்களையும் பெறக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. 
 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
வேலுநாச்சியார் போல் வரிவிதிப்பை எதிர்ப்போம்