1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2019 (11:37 IST)

மோடிக்கு முன்னரே விசிட் அடித்த ராகுல்;கேரளா உற்சாகம்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தான் வெற்றிபெற்ற தொகுதியான கேரளாவின் வயநாடு தொகுதியில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்கவுள்ளார்.
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த தேசிய காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. முக்கியமாக பல தேர்தல்களில் காங்கிரஸிற்கு வெற்றி வாகை சூடிய உத்தர பிரதேசத்தின் அமெதி தொகுதி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் ஏமாற்றத்தை குடுத்தது. ஆனால் கேரளாவில் பெருபான்மையான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் ராகுல் பெரும் வெற்றிப்பெற்ற மற்றொரு தொகுதியான கேரளாவின் வயநாட்டில் இன்று முதல் தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும் அவர் வயநாடு மட்டுமல்லாமல் கோலிகோடு, மல்லபுரம் ஆகிய தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தனது பயண திட்டத்தில் வரும் சனிக்கிழமை கேரளாவிற்கு வருகை தரும் நிலையில் அதற்கு ஒரு நாள் முன்பே ராகுல் கேரளாவிற்கு வருகை தந்தது கேரள மக்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று செய்திகள் வெளிவருகின்றன.