1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rahul Gandhi question to PM Modi

லக்னோ போனவருக்கு லக்கிம்பூர் போக நேரமில்லையா? – பிரதமருக்கு ராகுல் கேள்வி!

Rahul Gandhi
உத்தர பிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த நிலையில் பிரதமர் மோடி அங்கு செல்லாதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் பயணம் செய்தபோது அணிவகுத்த கார் அங்கு போராடிய விவசாயிகளை மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காண சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில் மற்ற மாநில முதல்வர்கள் உ.பி வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல்காந்தி உ.பி செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ராகுல்காந்தி “என்னையும், என் குடும்பத்தினரையும் எவ்வளவு துன்புறுத்தினாலும் விவசாயிகள் பக்கம் நின்று போராடுவோம். நேற்று லக்னோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி லக்கிம்பூர் செல்லாதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆட்கொல்லியாக மாறும் அபாயத்தில் நீலகிரி டி23 புலி? – வியூகம் வகுக்கும் வனத்துறை!