புதன், 18 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (22:31 IST)

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம்: பஞ்சாப் முதல்வர் கண்டனம்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம்: பஞ்சாப் முதல்வர் கண்டனம்
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு பாடத்திட்டத்தில் இந்தி மொழி பாடங்கள் மட்டும் முதன்மையாகவும், தமிழ், பஞ்சாபி உள்ளிட்ட மாநில மொழிகள் சிறிய பாடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். தாய்மொழியை படிக்கும் அடிப்படை உரிமையை இது பறிப்பதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதே போல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உள்பட தமிழக அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.