1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Priyanka chopra share her bollywood experience

வாய்ப்புக்காக படுக்கையை பகிறும் நடிகர்கள் - பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி தகவல்

Priyanaka chopta
சினிமா வாய்ப்புகளுக்காக ஆண்களும் பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள் என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

 
சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது பல வருடங்களாகவே செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
தமிழ், ஹிந்தி சினிமா உலகில் உள்ள பல நடிகைகள், தாங்கள் திரைத்துறை வந்த போதும், அதன் பின்பும் பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக ஏற்கனவே கூறியிருந்தனர்.
 
இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா “நான் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, என்னை அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக சொன்னார்கள். அதற்கு நான் மறுத்துவிட்டேன். எனவே, என்னை படங்களிலிருந்து நீக்கினர். அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
 
என்னுடைய முடிவுகளுக்கு என் குடும்பம் ஆதரவாக இருக்கிறது. அதுவே என் பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் கூட பட வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள்” என அவர் பேசினார்.
அடுத்த கட்டுரையில்
சினிமா - 2017 தமிழில் அறிமுகமான நடிகைகள்