தொடர்புடைய செய்திகள்
- ஒரே வாரத்தில் மீண்டும் பிரச்சனை: நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல்!
- போலி போலீஸ் ஸ்டேஷன் நடத்திய கும்பல் கைது: 8 மாதங்களாக நடத்தியது அம்பலம்
- பீகாரில் 31 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பு: சுயேட்சைக்கும் அமைச்சர் பதவி
- எனக்கு பிரதமர் பதவி வேண்டாம், மாநில மக்களுக்கு சேவை செய்யவே ஆசை: நிதிஷ்குமார்
- சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: பீகார் முதல்வர் கொண்டு வருகிறார்!
நிதிஷ்குமாருக்கு ஆதரவளிக்க தயார், ஆனால் ஒரு நிபந்தனை: பிரசாந்த் கிஷோர்
பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்
இன்னும் 2 ஆண்டுகளில் பீகாரில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் 2 ஆண்டுகள் இந்த கூட்டணி ஆட்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரசார வியூகம் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தெரிவித்துள்ள அறிக்கையில் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் நிதீஷ்குமார் தலைமையிலான அரசு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினால் என்னுடைய கட்சி அவரது கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்
மேலும் எதிர்காலத்தில் பீகார் மாநிலத்தில் பல அரசியல் எழுச்சிகளை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
