1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (11:03 IST)

நிதிஷ்குமாருக்கு ஆதரவளிக்க தயார், ஆனால் ஒரு நிபந்தனை: பிரசாந்த் கிஷோர்

prasanth
பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்
 
இன்னும் 2 ஆண்டுகளில் பீகாரில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் 2 ஆண்டுகள் இந்த கூட்டணி ஆட்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரசார வியூகம் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தெரிவித்துள்ள அறிக்கையில் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் நிதீஷ்குமார் தலைமையிலான அரசு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினால் என்னுடைய கட்சி அவரது கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் எதிர்காலத்தில் பீகார் மாநிலத்தில் பல அரசியல் எழுச்சிகளை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்