1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 24 பிப்ரவரி 2022 (20:08 IST)

ரஷ்ய அதிபர் புதினிடம் பேசுகிறார் பிரதமர் மோடி: போர் நிறுத்தப்படுமா?

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர்  ஆரம்பித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அவர்களிடம் இன்று இரவு இந்திய பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்திய பிரதமர் உலகம் முழுவதும் செல்வாக்கு உள்ளவர் என்பதால் அவர் கூறினார் ரஷ்ய அதிபர் போரை நிறுத்துவார் என்றும் இதுகுறித்து இந்திய தங்களுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்றும் உக்ரைன் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்தது.
 
இந்த கோரிக்கையை ஏற்று இன்று இரவு ரஷ்ய அதிபர் புதின் அவர்களிடம் பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து போர் நிறுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்