1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM appreciate poor merchant in chandihar

பிரதமரின் பாராட்டை பெற்ற தெருவோர பூரி வியாபாரி!

poori
பிரதமர் மோடியின் பாராட்டை சண்டிகரை சேர்ந்த தெருவோர பூரி வியாபாரி ஒருவர் பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு தனது கடையில் பூரி இலவசம் என்ற அறிவிப்பை சண்டிகரை சேர்ந்த தெருவோர பூரி வியாபாரி ராணா என்பவர் வெளியிட்டு இருந்தார் 
 
அப்போது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு பூரி மற்றும் மசாலா இலவசம் என்று அறிவித்துள்ளார்
 
இந்த அறிவிப்பு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்கு மீண்டும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். உங்களின் பணி மிகவும் மகத்தானது என்றும் இதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார் பிரதமரின் பாராட்டை பெற்ற பூரி கடைக்காரர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.200 உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்