தொடர்புடைய செய்திகள்
- மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்
- நாடாளுமன்றத்தில் அமளி; ஆவேசமான பிரதமர் மோடி? – இரு அவைகளும் ஒத்திவைப்பு!
- நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகள் ஆயத்தம்
- இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு !
- விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவை! பொறுப்புகள் என்ன? – இன்று மாலை அமைச்சரவை கூட்டம்!
தொடர்ந்து எதிர்கட்சிகள் அமளி; நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் எதிர்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மக்களவை மற்றும் மாநிலங்களை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பிற்கு பிறகு கூட்டப்படும் கூட்டத்தொடர் என்பதால் பிரதமர் மோடி அமைச்சர்கள் பட்டியல் அறிக்கையை வாசிக்க இருந்தார்.
இந்நிலையில் செல்போன் தகவல் திருட்டு விவகாரம் உள்ளிட்டவற்றை குறித்து அமளி எழுப்பிய எதிர்கட்சிகள் பிரதமர் மோடியை பேச விடாமல் குறுக்கீடு செய்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் மதியம் வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை தொடங்கிய நிலையில் செல்போன் வழியாக உளவு பார்த்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என விளக்கமளித்தும் தொடர் அமளி ஏற்பட்டது. எதிர்கட்சிகள் அவை தலைவர் அருகே சென்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
