1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (11:59 IST)

நாடாளுமன்றத்தில் அமளி; ஆவேசமான பிரதமர் மோடி? – இரு அவைகளும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் எதிர்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மக்களவை மற்றும் மாநிலங்களை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பிற்கு பிறகு கூட்டப்படும் கூட்டத்தொடர் என்பதால் பிரதமர் மோடி அமைச்சர்கள் பட்டியல் அறிக்கையை வாசிக்க இருந்தார்.

இந்நிலையில் செல்போன் தகவல் திருட்டு விவகாரம் உள்ளிட்டவற்றை குறித்து அமளி எழுப்பிய எதிர்கட்சிகள் பிரதமர் மோடியை பேச விடாமல் குறுக்கீடு செய்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் மக்களவை 2 மணி வரைக்கும், மாநிலங்களவை 12.25 வரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர் மற்றும் பெண்களை அமைச்சராக்கியது பிடிக்காமல் எதிர்கட்சிகள் அமளி செய்வதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.