1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 18 ஜூலை 2022 (18:38 IST)

கேரளத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 2வது நபர்: அதிர்ச்சி தகவல்

monkey
கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது நபர் ஒருவருக்கு குரங்குஅம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
 இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை கூறுகையில் குரங்கு அம்மை நோய் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்றும் வாயின் உள்பகுதி ஆகியவற்றுக்கு வலி இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே ஐக்கிய அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதித்த நிலையில் தற்போது கன்னூர் மாவட்டத்தை சேர்ந்த 31 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.