தொடர்புடைய செய்திகள்
- நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா?
- பிரதமர் வெளிநாட்டுப் பயணத்துக்கு எவ்வளவு செலவு தெரியுமா...?
- இந்தியாவில் விலை இல்லை; வெளிநாடுகளில் மவுசு – வெங்காய ஏற்றுமதி அதிகரிப்பு
- நித்தியானந்தா என்னை கபளீகரம் செய்தார் –மீ டூ புகார் சொல்லும் பிரபல சிஷ்யர்
- சினிமா ஸ்டைலில் போலிஸின் பைக்கிலேயே தப்பிச் சென்ற கைதி!
எங்கே இருக்கிறார்கள் நித்தி , ரஞ்சிதா? –குழப்பத்தில் சி.பி.ஐ.
நித்யானாந்தா மீது பாலியல் வழக்கின் விசாரணை ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அவர், தலை,மறைவாகியுள்ளதாகத் தெரிகிறது.
நித்யானாந்தா மீது பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கன்னட சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. ஆனால் அவரது பாஸ்போர்ட் காலாவதி ஆகி விட்டதால் அவரால் வெளிநாட்டிற்கு சென்றிருக்க முடியாது என சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க நித்யானந்தா தலைமறைவாகியுள்ளதாகவும், நேபாளம் வரை சாலை மார்க்கமாகவும் அதன்பின் பிரிட்டன் ஆதிக்கத்திலுள்ள, 'கெய்மன்' தீவுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
நித்யானந்தா கடந்த சில மாதங்களாவே எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை என்ப் போலிஸார் சார்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் அடிக்கடி இணையதளம் மூலம் ஆன்மீகப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் நித்யானந்தாவோடு பாலியல் வழக்கில் சிக்கிய நடிகை ரஞ்சிதாவையும் சில நாட்களாகக் காணவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
