1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Nithieshkumar says dmk leaders will learn hindi

திமுக தலைவர்கள் இந்தி மொழியை கற்க வேண்டும்.. டிஆர் பாலுவிடம் கோபமாக தெரிவித்த நிதிஷ்குமார்?

திமுக
நேற்று இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஹிந்தியில் பேசினார். அப்போது அவர் ஹிந்தியில் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று டி ஆர் பாலு கோரிக்கை விடுத்த நிலையில் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஆனால் இதற்கு நிதிஷ்குமார் கடும் கோபமடைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை நிறுத்துமாறு கூறியதாக தகவல் வெளியாகி உள்ளன.  திமுக தலைவர்கள் இந்தியை கற்க வேண்டும் என்றும் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு போன போதை ஆங்கிலமும் அவர்களுடன் போய்விட்டது என்றும் தெரிவித்ததாகவும் தனது இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை உடனே நிறுத்துமாறு நிதீஷ் குமார் கோபத்துடன் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தெரியாது போடா என தமிழகத்தில் பேசும்  திமுக, நிதிஷ்குமார் கோபமாக கூறிய போது அமைதியாக இருந்ததாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ED அதிகாரி அங்கீத் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு...!