1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. New paradise will be created in Kashmir PM Modi

காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும் - பிரதமர் மோடி !

காஷ்மீர்
சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு உண்டான 370 மற்றும் 35ஏ ஆகிய சிறப்பு பிரிவுகள்  நீக்கப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு பாகிஸ்தான் நாடு பலத்த எதிர்ப்புகள் தெரிவித்து, ஐநா சபையில் முறையிட்டது. ஆனால் அந்நாட்டின் குரலை யாரும் கேட்கவில்லை. அதனால் அவர்கள் முயற்சி தோல்வியைத் தழுவியது.
 
இந்நிலையில்   காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
அடித்த மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக ,அம்மாநிலத்திற்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி, காஷ்மீரில் மக்கள் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்குக் காரணம் காங்கிரஸ்தான் எனக்குற்றம் சாட்டினார். மேலும் காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.  
 
 
About Writer
sinojkiyan
அடுத்த கட்டுரையில்
வெள்ளை நிற புள்ளிகளுடன் பிறந்த அதிசய குதிரை.. வைரல் போட்டோ