1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Mumbai court explaination about rape is going controversial

ஆடைக்கு மேலே தொட்டால் வன்கொடுமை ஆகாது! – நீதிமன்ற விளக்கத்தால் அதிர்ச்சி!

National
பெண்களை ஆடைக்கு மேலே தொடுவது பாலியல் வன்கொடுமை என கொள்ளப்படாது என மும்பை நீதிமன்றம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டுமென பெண்ணிய உரிமையாளர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வன்கொடுமை வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த மும்பை உயர்நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் அடிப்படையில் ஆடைக்கு மேலே தொடுவது வன்கொடுமை இல்லை என சுட்டிக்காட்யுள்ளது. உயர்நீதிமன்றத்தில் இந்த விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ள மத்திய அரசின் அட்டர்னி வேணுகோபால் “மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என வாதிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
அரசியலில்‌ இல்லை என்றாலும்‌ எனக்கு தலைவர்‌ ரஜினி தான்: அர்ஜூனாமூர்த்தி அறிக்கை