1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:33 IST)

புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்து: 17 பேர் பலி..!

மிசோரம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அதில் 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
 
மிசோரம் மாநிலத்தில் உள்ள சாய்ராங் என்ற பகுதியில் கடந்த சில மாதங்களாக புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்தது. 
 
இந்த பாலம் திடீரென இன்று  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் இடுப்பாடுகளில் சிக்கி இருக்கும் சுமார் 30 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
 
Edited by Mahendran