தொடர்புடைய செய்திகள்
- கழிப்பறையில் ஒழுங்காக சிறுநீர் கழிக்கத் தெரியாத சிறுமி – கொலை செய்த காப்பாளர் !
- சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன தெரியுமா...?
- காதலிக்க மறுத்த ஆண்; முகத்தில் ஆசிட் வீசிய பெண்..
- கைகளில் 12 விரல்கள் ; கால்களில் 20 விரல்கள் – ஐந்தாயிரத்தில் ஒருவர்!
- வேற வழி இல்ல... நடுவானில் சிறுநீரை வாயால் உறிஞ்சிய மருத்துவர்!
ஆதிக்க சாதி பெண்ணோடு காதல் – தலித் இளைஞன் மேல் சிறுநிர் கழித்த கொடூரர்கள் !
ஆதிக்க சாதி பெண் ஒருவரைக் காதலித்த தலித் இளைஞரின் மேல் சிறுநீர் கழித்துள்ளனர் சாதி வெறியர்கள் சிலர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பங்கிலா எனும் கிராமத்தை சேர்ந்தவர் சௌமியா ரஞ்சன் தாஸ். தலித் இளைஞரான இவர், அதே பகுதியில் வசிக்கும் ஆதிக்க சாதி பெண் ஒருவரை காதலித்துள்ளார். அந்தப் பெண்ணும் இவரைக் காதலித்துள்ளார். தனது காதலியைப் பார்ப்பதற்காக சௌமியன் சென்றுள்ளனர். அப்போது அவரைப் பார்த்து ஆதிக்க ஜாதி இளைஞர்கள் இருவர் அவரை அடித்து மரத்தில் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளனர்.
இதனால் மயக்கமுற்ற அவர் நாவறட்சியால் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளார். அவருக்கு தண்ணீர் கொடுக்க மறுத்த அந்த இளைஞர்கள் சிறுநீரை அந்த இளைஞனின் முகத்தில் கழித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுற்றி இருந்தவர்களை வைத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதைப்பார்த்த சமூகவலைதள வாசிகள் கண்டனங்களை எழுப்ப வழக்கு பதிவு செய்த போலீசார், இளைஞரின் மீது சிறுநீர் கழித்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
